பலகை

ஆகஸ்ட் 20, 2006

“உடம்பை வளர்த்து வெச்சுருக்கிறீங்க ….”

Filed under: உணவு,கவனித்தவை,சமுதாயம் — சுப்புடு @ 1:47 பிற்பகல்

உலகெங்கிலும் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பரவலாக middle class மக்களிடம் பெருகி வரும் obesity எனும் பிரச்னையை சென்னையிலும் கவனித்து வருகிறேன். இதற்க்கு visual indicators என்று சொல்லப்படும் ‘விழிச்சான்றுகள்’ பல உள்ளன. அவற்றில் சில:

பொதுவாக தனிப்பட்ட வீடுகளில் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத்தான் திறந்து வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒற்றைக் கதவு வழியே நேராக உள்ளே நுழைவதற்கான சாத்தியம் பல பேருக்கு குறைந்து வருகிறது – பக்க வாக்கில்தான் நுழைய முடிகிறது! (புதிதாக கட்டப்படும் வீடுகளில் கதவுகளை அகலமாக வைப்பதற்கான காரணமும் இதுவாக இருக்குமோ?!)

சென்னை மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் அகல அளவு, பல வருடங்களுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்டு இன்னமும் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இவ்விருக்கைகளில் பேருந்தின் உள்ப்பக்கம் இரண்டவதாக அமரும் நபர்களின் பாடு திண்டாட்டம்தான்! அவர்களின் பின்புறங்களில் பாதி வெளியேதான் இருக்கிறது!

இன்று நான் பயணம் செய்த மாசற்ற பேருந்தில் இப்பிரச்னை, இருவருக்குள் கைகலப்பையே ஏற்படுத்தி விட்டது. உள்பக்கத்தில் அமர்ந்திருந்த பருமனான ஒருவர் ஜன்னல் பக்க பயணியை சற்றே தள்ள, “பாதிக்கப்பட்டவர்” அவரிடம் “உடம்பை வளர்த்து வெச்சுருக்கிறீங்க …. இப்படி தொந்தரவு பண்ணுகிறீர்களே!” என்று சண்டைக்கு வர …

கருத்துத் தெரிவிக்கவும் »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை

மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Theme: Rubric. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.