இன்று காலை அடையாறு காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்தது. வழக்கம் போல் எனது தடத்தைத் தவிர அனைத்து எண்களும் வந்து போயின. கிடைத்த நேரத்தில் இது வரை காணப்படாத ஒரு விஷையத்தை கவனித்தேன். மெரீனா பீச் வழியாக சென்ற அனைத்து பேருந்துகளிலும், வழிப்பலகைப் பட்டியலில் “கண்ணகி சிலை” என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கண்ணகி சிலையை மீண்டும் கடற்க்கரைக்கு கொண்டு சென்றதை சம்மட்டி அடித்தாற்ப் போல் பொது மக்களுக்குச் சொல்ல விரும்பினால், இதை விடச்சிறந்த முறையில் சொல்ல முடியாதென்று தோன்றியது.
ஆகஸ்ட் 8, 2006
கருத்துத் தெரிவிக்கவும் »
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை